மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சசிகுமார், ஹரிபிரியா நடிக்கும் 'நான் மிருகமாய் மாற' படம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதனை கழுகு படத்தை இயக்கிய சத்திய சிவா இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு முதலில் 'காமென்மேன்' என்று டைட்டில் வைக்கப்பட்டிதிருந்தது. அந்த டைட்டிலை இன்னொரு கம்பெனி பதிவு செய்து வைத்திருந்ததால் தற்போது 'நான் மிருகமாய் மாற' என மாற்றப்பட்டுள்ளது.
படம் குறித்து சசிகுமார் அளித்த பேட்டி: இந்த படத்தில் நான் சினிமா சவுண்ட் என்ஜீனியராக நடித்திருக்கிறேன். எனது மனைவியாக ஹரிப்பிரியா நடித்துள்ளார். அமைதியான எங்கள் வாழ்க்கையில் ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்து விட, காமென் மேனாக இருந்த நான் எப்படி மிருக குணம் கொண்டவனாக மாறுகிறேன் என்பதுதான் படத்தின் கதை.
நான் இப்போது மதுரையில் வாழ்கிறேன். படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே சென்னைக்கு வருகிறேன். எனது படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் மதுரை, தேனி பகுதியில் நடப்பதால் அங்கு இருப்பதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது. எனது குடும்பத்தில் நடந்த சில நிகழ்வுகளால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். அதனால் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்தேன். இப்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.
கையில் இருக்கும் படங்களை வேகமாக முடித்து கொடுத்து விட்டு அடுத்த படம் இயக்கலாம் என்று இருக்கிறேன். விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சரித்திர படத்தை இயக்குகிறேன். இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. சு.வெங்கடேசன் எழுதிய ஒரு சரித்திர புனைவு கதையை படமாக்கும் திட்டம் இருக்கிறது. அது பெரிய பட்ஜெட் படம் என்பதால் இப்போதைக்கு அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை. இனி நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என எனது பயணம் விறுவிறுப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.