லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து தாய்லாந்து நாட்டில் தனது பைக் பயணத்தை தொடங்கி இருக்கிறார் அஜித்குமார். அப்போது அவர் அங்குள்ள ஒரு புத்தர் சிலைக்கு முன்பு தான் நின்று எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், அமைதிக்கு முன்பு ஒரு புயல் என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். மேலும் துணிவு படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.