தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' |
பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் தற்போது தனி இசை ஆல்பங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ம லையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அவர் வெளியிடும் இசை ஆல்பம் 'ஓ பெண்ணே...' இதன் தமிழ் பதிப்பை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார்.
வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தேவி ஸ்ரீ பிரசாத்தை எனக்கு பல நாட்களாக தெரியும். இவர் என்னை அதிகமாக வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். பல சாதனைகள் படைத்து அடுத்து அடுத்து என உத்வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறார், அது சிறந்த இசை கலைஞர்களுக்கே உண்டான சிறப்பம்சம். இவருக்கு வெற்றி கண்டிப்பாக வந்தே தீர வேண்டும், இவருக்கு வெற்றி தாமதமாவதை எண்ணி நான் வருத்தப்பட்டு இருக்கிறேன்.
திரை இசை பாடல்களை தாண்டி, சுயாதீன பாடல்கள் நிறைய வர வேண்டும், இசை கலைஞர்கள் அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. திரை இசை அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு தான், இளையராஜாவே ஆனாலும் அவர் படத்தின் கதைக்குள்தான் இசை அமைத்தாக வேண்டும். சுயாதீன பாடல்கள் தான் இசை கலைஞர்கள் தங்களுடைய முழு திறமையும் வெளிகாட்ட ஒரு பாதையாக இருக்கும். இது தனித் துறையாக வளர வேண்டும்.
மற்ற நாடுகளில் திரை பிரபலங்களை விட சுயாதீன கலைஞர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள் நடிகர்களை விட அவர்கள் பாப்புலராக இருக்கிறார்கள். தனி விமானங்களில் பயணிக்கிற அளவிற்கு வசதியானவர்களாக இருக்கிறார்கள்.. திரைப்படங்களை விட மிகபெரிய துறையாக இசை துறை வளர வேண்டும், அதற்கு உண்டான தகுதி அதில் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.