தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' |
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. நாங்கள் அம்மா, அப்பா ஆகிவிட்டோம் என விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனும் இவர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நீண்டநாள் காதலர்களாக வலம் வந்த இவர்கள் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் உள்ள கடற்கரை ஒன்றில் பிரம்மாண்டமாய் இவர்களது திருமணம் நடந்தது. தொடர்ந்து ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று வந்தனர்.
இந்நிலையில் இந்த தம்பதியர் திடீரென தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி குழந்தைகளின் பாதங்களில் முத்தமிட்டு மகிழும் போட்டோவை பகிர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு : ‛‛நயன்தாராவும், நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அனைவரின் ஆசீர்வாதமும் தேவை. உயிர் மற்றும் உலகம்'' என தெரிவித்துள்ளார்.
வாடகைத்தாய் மூலம் இந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அதுபற்றி இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை. ரசிகர்களும், திரையுலகினரும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.