‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு கதாநாயகிக்கும் கிடைக்காத ஒரு பெருமை தமிழில் நடிக்க வந்த ஐஸ்வர்யா ராய்க்குக் கிடைத்துள்ளது. தமிழில் இதுவரையில் அதிக பொருட் செலவில் தயாரான இரண்டு பிரம்மாண்டப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளவர் ஐஸ்வர்யா ராய். ஒரு படம் 'எந்திரன்'. தமிழில் முதன் முதலில் அதிக வசூலைக் குவித்து லாபத்தைக் கொடுத்த படம். மற்றொரு படம் தற்போது வெளிவந்துள்ள 'பொன்னியின் செல்வன்'.
இரண்டு படங்களிலுமே ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் வழக்கமான கதாபாத்திரங்களை விட மாறுபட்ட கதாபாத்திரங்கள். அவரை விட அதிக வயது கதாநாயகர்களுடன் இரண்டு படங்களிலும் ஜோடி சேர்ந்திருந்தாலும் அவருடைய அழகையும், நடிப்பையும் ரசிகர்கள் ஆராவாரத்துடன் ரசித்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் தமிழ்க் கதாநாயகிகளை விடவும் வேறு மொழியிலிருந்து வந்த கதாநாயகிகள்தான் அதிகப் பெயரைப் பெறுவார்கள். அந்த விதத்தில் தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், ஹிந்தியில் ஐஸ்வர்யா எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் 'எந்திரன், பொன்னியின் செல்வன்' இரண்டு படங்களும் அவருடைய ஒட்டு மொத்த திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களாக இருக்கும்.
அதை அவரும் உணர்ந்திருக்கிறார். அதனால்தான் 'பொன்னியின் செல்வன்' படத்தை இங்கு பார்க்க மும்பையிலிருந்து மகளுடன் கிளம்பி வந்து ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்து ரசித்து மகிழ்ந்திருக்கிறார்.
'எந்திரன்' சனா கதாபாத்திரமும், 'பொன்னியின் செல்வன் 1' நந்தினி கதாபாத்திரமும் மறக்க முடியாதவை. அடுத்து 'பொன்னியின் செல்வன் 2' மந்தாகினி கதாபாத்திரத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.