முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தெலுங்கில் கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் பிசியான நடிகையாகி உள்ளார். தற்போது அமிதாப்பச்சனுடன் 'குட் டே', ரன்பீர் கபூருடன் ‛அனிமல்', தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் ‛புஷ்பா -2' படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமான 'கீதாகோவிந்தம்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் கதாநாயகனாக நடித்த விஜய் தேவரகொண்டா உடன் மீண்டும் ‛டியர் காம்ரேட்' படத்தில் இணைந்து நடித்தார் ராஷ்மிகா. அப்போது இருந்து இருவரும் காதலிப்பதாக செய்தி வெளியாகி வந்தது. ஆனால் அதற்கு இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா உடனான காதல் வதந்தி குறித்த கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்தபோது ‛இது ஒரு கியூட் வதந்தி' என்று கூறியுள்ளார்.