கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தெலுங்கில் கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் பிசியான நடிகையாகி உள்ளார். தற்போது அமிதாப்பச்சனுடன் 'குட் டே', ரன்பீர் கபூருடன் ‛அனிமல்', தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் ‛புஷ்பா -2' படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமான 'கீதாகோவிந்தம்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் கதாநாயகனாக நடித்த விஜய் தேவரகொண்டா உடன் மீண்டும் ‛டியர் காம்ரேட்' படத்தில் இணைந்து நடித்தார் ராஷ்மிகா. அப்போது இருந்து இருவரும் காதலிப்பதாக செய்தி வெளியாகி வந்தது. ஆனால் அதற்கு இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா உடனான காதல் வதந்தி குறித்த கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்தபோது ‛இது ஒரு கியூட் வதந்தி' என்று கூறியுள்ளார்.