குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் |
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2010ம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இருந்த பகையை வைத்து உருவாக்கப்பட்டிருந்த அப்படம் வெளியானபோது பெரிதாக ஓடவில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல அனைவரும் ஆயிரத்தில் ஒருவனை கொண்டாடிவருகின்றனர். இதனால் அப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க செல்வராகவன் ஆயத்தமாகி வருகிறார்.
ஆயிரத்தில் ஒருவனில் பார்த்திபன் ஏற்று நடித்திருந்த சோழ மன்னர் கதாபாத்திரத்தில், இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த நிலையில் நானே வருவேன் படத்தை தனுஷை வைத்து இயக்கியிருந்த செல்வராகவன், சமீபத்தில் அளித்த பேட்டியில், ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்த தகவலை தெரிவித்தார்.
செல்வராகவனிடம் நெறியாளர், ‛ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானபோது நாங்கள் கொண்டாடவில்லை அது எங்கள் தவறுதான். ஆனால் தற்போது கொண்டாட ஆரம்பித்திருக்கிறோம். இதை பார்க்கும்போது ஒரு படைப்பாளியாக உங்களுக்கு என்ன தோன்றுகிறது' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த செல்வராகவன், ‛ஒரு படைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காதபோது நிச்சயம் அது வருத்தத்தை கொடுக்கும். அப்படித்தான் ஆயிரத்தில் ஒருவனும். அந்தப் படம் வந்திருந்தபோதே கொண்டாடப்பட்டிருந்தால் நிச்சயம் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள் என சென்றிருக்கும்' என்றார்.