ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2010ம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இருந்த பகையை வைத்து உருவாக்கப்பட்டிருந்த அப்படம் வெளியானபோது பெரிதாக ஓடவில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல அனைவரும் ஆயிரத்தில் ஒருவனை கொண்டாடிவருகின்றனர். இதனால் அப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க செல்வராகவன் ஆயத்தமாகி வருகிறார்.
ஆயிரத்தில் ஒருவனில் பார்த்திபன் ஏற்று நடித்திருந்த சோழ மன்னர் கதாபாத்திரத்தில், இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த நிலையில் நானே வருவேன் படத்தை தனுஷை வைத்து இயக்கியிருந்த செல்வராகவன், சமீபத்தில் அளித்த பேட்டியில், ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்த தகவலை தெரிவித்தார்.
செல்வராகவனிடம் நெறியாளர், ‛ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானபோது நாங்கள் கொண்டாடவில்லை அது எங்கள் தவறுதான். ஆனால் தற்போது கொண்டாட ஆரம்பித்திருக்கிறோம். இதை பார்க்கும்போது ஒரு படைப்பாளியாக உங்களுக்கு என்ன தோன்றுகிறது' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த செல்வராகவன், ‛ஒரு படைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காதபோது நிச்சயம் அது வருத்தத்தை கொடுக்கும். அப்படித்தான் ஆயிரத்தில் ஒருவனும். அந்தப் படம் வந்திருந்தபோதே கொண்டாடப்பட்டிருந்தால் நிச்சயம் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள் என சென்றிருக்கும்' என்றார்.