நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

இந்திய மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 23ம் தேதியை தேசிய சினிமா தினமாக அறிவித்திருந்தது. அன்றைய தினம் எல்லா சினிமாவுக்கும் 75 ரூபாய்தான் கட்டணம் என்று அறிவித்தது. இதன் காரணமாக பல திரையரங்குகளில் வழக்கத்தை விட முன்பதிவு அதிகமாக நடந்தது. 50 சதவிகித டிக்கெட்டுகள் ஒரு நாள் முன்பே, விற்றுத் தீர்ந்துவிட்டன.
23ம் தேதி மட்டும் சுமார் 65 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் திரையரங்குகளில் படம் பார்த்துள்ளனர். பல தியேட்டர்களில் 6 காட்சிகள் வரை திரையிடப்பட்டன. அன்றைய தினம் படம் பார்க்க வந்த ரசிகர்கள் “இந்த கட்டணத்தில் நாங்கள் எல்லா படத்தையும் பார்ப்போம்” என்று கூறியுள்ளனர். இதன் மூலம் மக்கள் சினிமா தியேட்டருக்கு வரத் தயங்குவதற்கு காரணம் அதன் கட்டண உயர்வே என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் அதிபர்கள் சங்கம் விரிவான விவாதம் ஒன்றை தொடங்கி உள்ளது