தமிழக அரசு விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? |

தென்னிந்திய நடிகைகளில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்று நம்பர் 1 இடத்தில் இருப்பவர் 'வாரிசு' கதாநாயகி ராஷ்மிகா மந்தனா. அவருக்கு 33.6 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். அதற்கடுத்து 24.2 மில்லியன் பாலோயர்களுடன் சமந்தா, 23.7 மில்லியன் பாலோயர்களுடன் காஜல் அகர்வால், 22.5 மில்லியன் பாலோயர்களுடன் ரகுல் ப்ரீத் சிங், 21.5 மில்லியன் பாலோயர்களுடன் பூஜா ஹெக்டே ஆகியோர் உள்ளார்கள்.
இவர்களில் குறிப்பிட்ட சில புகைப்பட பதிவுகளுக்கு அதிக லைக்குகளை வாங்குபவர்களில் ராஷ்மிகாவும், பூஜாவும் முன்னணியில் உள்ளார்கள். அவர்களது சில புகைப்படங்கள் சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியன் லைக்குகளைக் கடந்துவிடும். இருவரில் யார் முன்னணி என்றால் அது ராஷ்மிகாதான். அவருடைய புகைப்படப் பதிவுகள் இரண்டு மில்லியன் லைக்குகளை சுலபத்தில் தொட்டுவிடுகிறது.
நேற்று இரவு கூட சில புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார் ராஷ்மிகா. 15 மணி நேரத்திற்குள்ளாக அந்தப் புகைப்படங்கள் இரண்டு மில்லியன் லைக்குகளைக் கடந்துள்ளது. 'வாரிசு' படமும், ஹிந்தியில் 'குட் பை' படமும் வெளிவந்துவிட்டால் ராஷ்மிகாவிற்கு ரசிகர்கள் இன்னும் அதிகமாகி, அவருடைய பாலோயர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம்.