ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் ஸ்ரீநாத் பாஷி. இவர் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கும்பலாங்கி நைட்ஸ், நிவின்பாலியுடன் ஜேக்கப்பிண்டே சொர்க்க ராஜ்ஜியம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இந்த நிலையில் இவர் நடித்துள்ள சட்டம்பி என்கிற படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிக்காக யூடியூப் சேனல் ஒன்றின் அலுவலகத்திற்கு சென்று நேரடியாக பேட்டி அளித்தார். இந்த நிலையில் அவரைப் பேட்டி கண்ட தொகுப்பாளினி அவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி அவமரியாதை செய்ததாக ஸ்ரீநாத் பாஷி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதுபற்றி போலீசார் விசாரித்தபோது ஸ்ரீநாத் பாஷி கூறுகையில், ‛பேட்டியின்போது தன்னை வேண்டுமென்றே மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாக உள்நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட தொகுப்பாளினி கேள்விகளை கேட்டதாகவும் அதனால் தான் ஒரு கட்டத்தில் கோபத்துடன் பேச நேர்ந்ததாகவும்' கூறியுள்ளார். அது மட்டுமல்ல இன்னொரு சேனலிலும் இவர் பேட்டியின்போது அங்கிருந்து தொகுப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ கிளிப் ஒன்றும் வெளியாகி இன்னும் பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.