மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பிய ஐஸ்வர்யா ராய் | ஓய்வு பெற துடிக்கும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்மான் கான் | என்னுடன் நடிக்க மறுத்தவர்கள் இப்போது என் படத்தை புரமோட் செய்கிறார்கள் ; கென் கருணாஸ் | மேடையில் நாற்காலி கவிழ்ந்து கீழே விழுந்த நாகசைதன்யா | ஒரே நாளில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் - த்ரிஷா, ரவி மோகன் - கெனிஷா | வரலட்சுமி இயக்குனராக அறிமுகமாகும் 'எஸ் சரஸ்வதி' தெலுங்கில் மட்டும் ரிலீஸ் | விஜய் தேவரகொன்டா - ராஷ்மிகா வரவேற்பு: தமிழ், கன்னடம், ஹிந்தி திரையுலகினர் 'ஆப்சென்ட்' | தான் எழுதிய 'மைல்கல்' புத்தகத்தை ரஜினியிடம் பரிசாக கொடுத்த இயக்குனர் ஞானவேல் | ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் |

சினிமாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு லட்சியம், கனவு இருக்கும். அதை அவர்கள் அடையும் போது அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியடைவார்கள். அப்படி ஒரு சந்தோஷமல்ல, டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ஜெயம் ரவி குடும்பத்தினர். முதல் சந்தோஷம், மணிரத்னம் இயக்கத்தில் முதல் முறையாக நடிப்பது, 'பொன்னியின் செல்வன்' படத்தில் டைட்டில் ரோலில் நடிப்பது என ஜெயம் ரவிக்கு அமைந்துள்ளது. வரும் வாரம் செப்டம்பர் 30ம் தேதி அப்படம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இரண்டாவது சந்தோஷம் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா, தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியை இயக்கியிருப்பது. அந்தக் கூட்டணியின் படமான 'காட் பாதர்' தெலுங்குப் படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ளது. அதனால், இந்த வருட விஜயதசமி ஜெயம் ரவி குடும்பத்தினருக்கு டபுள் சந்தோஷத்துடன் மறக்க முடியாத ஒரு நாளாக அமையப் போகிறது.
தமிழில் 'பொன்னியின் செல்வன்' படமும், தெலுங்கில் 'காட் பாதர்' படமும் இந்த வருடத்தின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்.
ஜெயம் ரவி, மோகன் ராஜாவின் அப்பா எடிட்டர் மோகன் ஒரு தயாரிப்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஜெயம் ரவியின் மாமியாரும் ஒரு தயாரிப்பாளர். ஜெயம் ரவி, மோகன் ராஜா சார்ந்த உறவினர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் பெரும் சந்தோஷமாக அமையும்.




