தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு லட்சியம், கனவு இருக்கும். அதை அவர்கள் அடையும் போது அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியடைவார்கள். அப்படி ஒரு சந்தோஷமல்ல, டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ஜெயம் ரவி குடும்பத்தினர். முதல் சந்தோஷம், மணிரத்னம் இயக்கத்தில் முதல் முறையாக நடிப்பது, 'பொன்னியின் செல்வன்' படத்தில் டைட்டில் ரோலில் நடிப்பது என ஜெயம் ரவிக்கு அமைந்துள்ளது. வரும் வாரம் செப்டம்பர் 30ம் தேதி அப்படம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இரண்டாவது சந்தோஷம் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா, தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியை இயக்கியிருப்பது. அந்தக் கூட்டணியின் படமான 'காட் பாதர்' தெலுங்குப் படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ளது. அதனால், இந்த வருட விஜயதசமி ஜெயம் ரவி குடும்பத்தினருக்கு டபுள் சந்தோஷத்துடன் மறக்க முடியாத ஒரு நாளாக அமையப் போகிறது.
தமிழில் 'பொன்னியின் செல்வன்' படமும், தெலுங்கில் 'காட் பாதர்' படமும் இந்த வருடத்தின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்.
ஜெயம் ரவி, மோகன் ராஜாவின் அப்பா எடிட்டர் மோகன் ஒரு தயாரிப்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஜெயம் ரவியின் மாமியாரும் ஒரு தயாரிப்பாளர். ஜெயம் ரவி, மோகன் ராஜா சார்ந்த உறவினர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் பெரும் சந்தோஷமாக அமையும்.