என்டிஆர், நீல் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்! | சித்தார்த் அப்படிப்பட்டவர் இல்லை! - கார்த்திக் ஜி கிரிஷ் | மலையாளத்தில் அறிமுகமாகும் துஷாரா விஜயன்! | குந்தனை நினைவுக்கூர்ந்த தனுஷ் | திரையுலக பயணம் 33 ஆண்டுகள் நிறைவு: டிச.4ல் வெளியாகிறது 'ஜனநாயகன்' இரண்டாம் பாடல் | 'பராசக்தி' படத்தின் டப்பிங்கை தொடங்கிய சிவகார்த்திகேயன்! | மகளுக்கு பெயர் சூட்டிய கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா தம்பதி! | 'தேரே இஷ்க் மே, ரிவால்வர் ரீட்டா' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'ரூட்' படத்தின் டப்பிங் முடித்த கவுதம் ராம் கார்த்திக்! | 'ஜீனி' படத்தின் புதிய அப்டேட் இதோ! |

சினிமாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு லட்சியம், கனவு இருக்கும். அதை அவர்கள் அடையும் போது அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியடைவார்கள். அப்படி ஒரு சந்தோஷமல்ல, டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ஜெயம் ரவி குடும்பத்தினர். முதல் சந்தோஷம், மணிரத்னம் இயக்கத்தில் முதல் முறையாக நடிப்பது, 'பொன்னியின் செல்வன்' படத்தில் டைட்டில் ரோலில் நடிப்பது என ஜெயம் ரவிக்கு அமைந்துள்ளது. வரும் வாரம் செப்டம்பர் 30ம் தேதி அப்படம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இரண்டாவது சந்தோஷம் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா, தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியை இயக்கியிருப்பது. அந்தக் கூட்டணியின் படமான 'காட் பாதர்' தெலுங்குப் படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ளது. அதனால், இந்த வருட விஜயதசமி ஜெயம் ரவி குடும்பத்தினருக்கு டபுள் சந்தோஷத்துடன் மறக்க முடியாத ஒரு நாளாக அமையப் போகிறது.
தமிழில் 'பொன்னியின் செல்வன்' படமும், தெலுங்கில் 'காட் பாதர்' படமும் இந்த வருடத்தின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்.
ஜெயம் ரவி, மோகன் ராஜாவின் அப்பா எடிட்டர் மோகன் ஒரு தயாரிப்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஜெயம் ரவியின் மாமியாரும் ஒரு தயாரிப்பாளர். ஜெயம் ரவி, மோகன் ராஜா சார்ந்த உறவினர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் பெரும் சந்தோஷமாக அமையும்.