சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து அதன் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அதைத்தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர், தனுஷ் உடன் மாறன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார் மாளவிகா மோகனன். அதற்கு முன்னதாக கடந்த 2013ல் மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பட்டம் போலே என்கிற படத்தில் அறிமுகமான மாளவிகா அதன்பிறகு இரண்டு மலையாள படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.
கடைசியாக 2017 ல் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான தி கிரேட் பாதர் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார் மாளவிகா. இந்த படத்தின் துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. கதாநாயகன் என பெரிய ஹீரோ யாரும் இந்த படத்தில் இல்லாத நிலையில் தண்ணீர் மாத்தன் தினங்கள் படம் மூலம் கவனம் ஈர்த்த இளம் நடிகர் மேத்யூ தாமஸ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் கேரள சினிமாவில் முக்கியமான எழுத்தாளர்களான இந்துகோபன் மற்றும் ஆடுஜீவிதம் நாவலை எழுதிய பென்யமின் இருவரும் இணைந்து இந்த படத்திற்கு கதை எழுதி உள்ளனர். ஆல்வின் ஹென்றி இயக்குகிறார். இளம் வயதினர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்த படம் உருவாகிறது.