‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தமிழ் சினிமாவில் நீண்ட நாளுக்கு பிறகு ஒரு வரலாற்றுப்படமாக வெளியாக இருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். அமரர் கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வனை இரண்டு வருடங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகம் வரும் செப்.,30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம்ரவியும், ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தியும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடித்துள்ள ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் பற்றி நடிகர் பிரசன்னா கூறும்போது, “தான் சினிமாவில் நடிகனாக நுழைந்த காலத்தில் இருந்தே இப்படி குதிரையில் சவாரி செய்யும் ஒரு வீரனாக நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமின் தோற்றத்தை பார்த்ததும் அதில் நான் என்னையே பார்த்துக்கொண்டேன். ஏதோ ஒரு நாளில் என் விருப்பம் நிறைவேறும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் பிரசன்னா. இதற்கு பதிலளித்த நடிகர் விக்ரம், “எனக்கு தெரியும்.. நிச்சயமாக விரைவில் ஒரு நாள் உன் கனவு நிறைவேற இருக்கின்றது” என்று ஊக்கம் அளித்துள்ளார்.