இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
தமிழ் சினிமாவில் நீண்ட நாளுக்கு பிறகு ஒரு வரலாற்றுப்படமாக வெளியாக இருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். அமரர் கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வனை இரண்டு வருடங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகம் வரும் செப்.,30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம்ரவியும், ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தியும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடித்துள்ள ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் பற்றி நடிகர் பிரசன்னா கூறும்போது, “தான் சினிமாவில் நடிகனாக நுழைந்த காலத்தில் இருந்தே இப்படி குதிரையில் சவாரி செய்யும் ஒரு வீரனாக நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமின் தோற்றத்தை பார்த்ததும் அதில் நான் என்னையே பார்த்துக்கொண்டேன். ஏதோ ஒரு நாளில் என் விருப்பம் நிறைவேறும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் பிரசன்னா. இதற்கு பதிலளித்த நடிகர் விக்ரம், “எனக்கு தெரியும்.. நிச்சயமாக விரைவில் ஒரு நாள் உன் கனவு நிறைவேற இருக்கின்றது” என்று ஊக்கம் அளித்துள்ளார்.