தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | படிப்பை விற்காதீர்கள்: தனுஷ் | மீண்டும் ஒரு ‛லக்கி மேன்' : ஹீரோவாக யோகி பாபு | பணிவாக இருங்கள், பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்க : மாணவர்களுக்கு நயன்தாரா அட்வைஸ் | 'உன்னோட நடந்தா' பாடல் அனுபவத்தைக் கூறும் சுகா | அமெரிக்க வசூல் - இரண்டாம் இடத்தைப் பிடித்த 'பதான்' | ரஜினி படங்கள், கின்னஸ் சாதனை படத்தை எடுத்த தயாரிப்பாளர் காலமானார் | பிப்ரவரி 18ல் சிம்புவின் ‛பத்து தல' படத்தின் இசை விழா | சூர்யா 42 : அதிரடி சண்டைக் காட்சி படமாக்கம் | 22வது திருமணநாளில் ராதிகாவுக்காக சரத்குமார் வெளியிட்ட வீடியோ |
ஜம்மு காஷ்மீரில் ஏராளமான தியேட்டர்கள் செயல்பட்டு வந்தன. தீவிரவாதிகளின் தாக்குதல், பழமைவாதிகளின் எதிர்ப்பு காரணமாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. சில தியேட்டர்களை தீவிரவாதிகளிள் தாக்கி அழித்தனர். மீண்டும் அங்கு தியேட்டர் திறக்க நடந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. 1999ம் ஆண்டு லால் சவுக் பகுதியில் ஒரு தியேட்டர் திறக்கபட்டடது அதனை தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்கினார். அதனால் அதுவும் கைவிடப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதால், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அங்கு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுகிறது. புகழ்பெற்ற தியேட்டர் செயின் நிறுவனமான ஐநாக்ஸ் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து 5 திரைகள் கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்கை அமைத்துள்ளது. இவற்றில் ஒரே நேரதில் 522 பேர் படம் பார்க்கலாம். வருகிற அக்டோபர் 1ம் தேதி இந்த திரையரங்குகள் மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
முதல் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் மற்றும் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி உள்ள விக்ரம் வேதா ஆகிய படங்களை திரையிட உள்ளனர். இதற்கான டிக்கெட் முன்பதிவு வருகிற 26ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.