சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
ஜம்மு காஷ்மீரில் ஏராளமான தியேட்டர்கள் செயல்பட்டு வந்தன. தீவிரவாதிகளின் தாக்குதல், பழமைவாதிகளின் எதிர்ப்பு காரணமாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. சில தியேட்டர்களை தீவிரவாதிகளிள் தாக்கி அழித்தனர். மீண்டும் அங்கு தியேட்டர் திறக்க நடந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. 1999ம் ஆண்டு லால் சவுக் பகுதியில் ஒரு தியேட்டர் திறக்கபட்டடது அதனை தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்கினார். அதனால் அதுவும் கைவிடப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதால், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அங்கு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுகிறது. புகழ்பெற்ற தியேட்டர் செயின் நிறுவனமான ஐநாக்ஸ் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து 5 திரைகள் கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்கை அமைத்துள்ளது. இவற்றில் ஒரே நேரதில் 522 பேர் படம் பார்க்கலாம். வருகிற அக்டோபர் 1ம் தேதி இந்த திரையரங்குகள் மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
முதல் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் மற்றும் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி உள்ள விக்ரம் வேதா ஆகிய படங்களை திரையிட உள்ளனர். இதற்கான டிக்கெட் முன்பதிவு வருகிற 26ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.