விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
தமிழ் சினிமா உலகில் எப்போதாவது ஒரு முறைதான் இந்த மாதிரியான அதிசயம் நடக்கும். அப்படி ஒரு அதிசயத்தை 'பொன்னியின் செல்வன்' படம் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 1000 தியேட்டர்கள் இருந்தாலும் சுமார் 7 கோடி வரை மக்கள் வசித்தாலும், சில லட்சம் பேர்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு வருகிறார்கள். ஒரு படம் நன்றாக இருந்தால் மட்டும் அப்படத்திற்குக் கூடுதலாக சில நாட்கள் ரசிகர்கள் வருகை இருக்கும்.
கடந்த சில வருடங்களாக அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனோ தாக்கத்தால் தியேட்டர்களுக்கு மக்கள் வருகை குறைந்து போனது. ஓடிடி தளங்கள் வந்ததாலும் தியேட்டர்களுக்கு எப்போதோ வருகிறவர்களும் கூட ஒரு மாதம் காத்திருந்து புதிய படங்களை தியேட்டர்களில் பார்த்தார்கள்.
ஆனால், 'பொன்னியின் செல்வன்' படம் தியேட்டர்களுக்கு வருவதை கடந்த சில வருடங்களாக நிறுத்திவிட்ட முதியோர்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவழைத்திருக்கிறது. அதிகாலை 4.30 மணி சிறப்பு காட்சியிலேயே பல முதியோர்களைப் பார்க்க முடிந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் குடும்பம் குடும்பமாக கைக் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தாய்மார்களும், தங்கள் வயதான பெற்றோர்களை அழைத்துக் கொண்டும் பலரும் வந்து போகிறார்கள் என தியேட்டர் வட்டாரங்கள் மகிழ்ச்சியாக உள்ளன.