பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
தமிழ் சினிமா உலகில் எப்போதாவது ஒரு முறைதான் இந்த மாதிரியான அதிசயம் நடக்கும். அப்படி ஒரு அதிசயத்தை 'பொன்னியின் செல்வன்' படம் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 1000 தியேட்டர்கள் இருந்தாலும் சுமார் 7 கோடி வரை மக்கள் வசித்தாலும், சில லட்சம் பேர்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு வருகிறார்கள். ஒரு படம் நன்றாக இருந்தால் மட்டும் அப்படத்திற்குக் கூடுதலாக சில நாட்கள் ரசிகர்கள் வருகை இருக்கும்.
கடந்த சில வருடங்களாக அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனோ தாக்கத்தால் தியேட்டர்களுக்கு மக்கள் வருகை குறைந்து போனது. ஓடிடி தளங்கள் வந்ததாலும் தியேட்டர்களுக்கு எப்போதோ வருகிறவர்களும் கூட ஒரு மாதம் காத்திருந்து புதிய படங்களை தியேட்டர்களில் பார்த்தார்கள்.
ஆனால், 'பொன்னியின் செல்வன்' படம் தியேட்டர்களுக்கு வருவதை கடந்த சில வருடங்களாக நிறுத்திவிட்ட முதியோர்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவழைத்திருக்கிறது. அதிகாலை 4.30 மணி சிறப்பு காட்சியிலேயே பல முதியோர்களைப் பார்க்க முடிந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் குடும்பம் குடும்பமாக கைக் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தாய்மார்களும், தங்கள் வயதான பெற்றோர்களை அழைத்துக் கொண்டும் பலரும் வந்து போகிறார்கள் என தியேட்டர் வட்டாரங்கள் மகிழ்ச்சியாக உள்ளன.