விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
தமிழ் சினிமா உலகில் எப்போதாவது ஒரு முறைதான் இந்த மாதிரியான அதிசயம் நடக்கும். அப்படி ஒரு அதிசயத்தை 'பொன்னியின் செல்வன்' படம் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 1000 தியேட்டர்கள் இருந்தாலும் சுமார் 7 கோடி வரை மக்கள் வசித்தாலும், சில லட்சம் பேர்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு வருகிறார்கள். ஒரு படம் நன்றாக இருந்தால் மட்டும் அப்படத்திற்குக் கூடுதலாக சில நாட்கள் ரசிகர்கள் வருகை இருக்கும்.
கடந்த சில வருடங்களாக அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனோ தாக்கத்தால் தியேட்டர்களுக்கு மக்கள் வருகை குறைந்து போனது. ஓடிடி தளங்கள் வந்ததாலும் தியேட்டர்களுக்கு எப்போதோ வருகிறவர்களும் கூட ஒரு மாதம் காத்திருந்து புதிய படங்களை தியேட்டர்களில் பார்த்தார்கள்.
ஆனால், 'பொன்னியின் செல்வன்' படம் தியேட்டர்களுக்கு வருவதை கடந்த சில வருடங்களாக நிறுத்திவிட்ட முதியோர்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவழைத்திருக்கிறது. அதிகாலை 4.30 மணி சிறப்பு காட்சியிலேயே பல முதியோர்களைப் பார்க்க முடிந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் குடும்பம் குடும்பமாக கைக் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தாய்மார்களும், தங்கள் வயதான பெற்றோர்களை அழைத்துக் கொண்டும் பலரும் வந்து போகிறார்கள் என தியேட்டர் வட்டாரங்கள் மகிழ்ச்சியாக உள்ளன.