ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் விஸ்வரூபம் படத்துக்கு பிரச்னை எல்லாம் முடிந்து வருகிற 7ம் தேதி படமும் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கிறிஸ்தவர் ஒருவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதுகுறித்து சென்னையை சேர்ந்த வக்கீல் ஜெபகுமார் ஜார்ஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, விஸ்வரூபம் படத்தில் கிறிஸ்தவ மதத்தவரை புண்படுத்தும்படியான சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே அந்தக்காட்சிகளை நீக்க வேண்டும். அதுவரை இப்படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தவழக்கை நீதிபதிகள் தர்மாராவ் மற்றும் வேணுகோபால் ஆகியோர் விசாரணைக்கு எடுத்து கொண்டனர். அப்போது நீதிபதிகள், இப்போது தான் இப்படம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வந்துள்ளன. மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.