முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு |

மஞ்சள் சிவப்பு பச்சை படத்திற்கு பிறகு தமிழில் சித்தார்த் நடித்த படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. சமீபத்தில் தெலுங்கில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த மகாசமுத்திரம் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் என்.ராஜசேகர் என்பவர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த படத்தில் கதாநாயகியாக ஆஷிகா ரங்கநாத் என்பவர் நடிக்கிறார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தனது சிறுவயது கனவு நனவானதாக கூறியுள்ளார் ஆஷிகா.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த படத்தின் கதையை கடந்த வருடமே என்னிடம் தொலைபேசியில் கூறினார்கள். படத்தின் கதையும் கதாபாத்திரமும் பிடித்திருந்தாலும் இரண்டு ஹீரோக்கள் கதை என்பதால் அதில் நடிப்பதற்கு சற்று தயங்கி சம்மதம் தெரிவிக்காமல் இருந்தேன். சில மாதங்கள் கழித்து அதே படக்குழுவினர் என்னை அழைத்து இந்தப்படத்தில் இரண்டு ஹீரோக்களில் சித்தார்த் ஒரு கதாநாயகனாக நடிக்கிறார் என்றும், அவருக்கு ஜோடியாக நீங்கள் நடிக்கிறீர்கள் என்றும் கூறினார்கள். உடனே மறுயோசனை எதுவும் செய்யாமல் நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டேன். காரணம் நான் பள்ளியில் படித்த காலத்தில் சித்தார்த்தின் படங்களை பார்த்து அவரது ரசிகையாகவே மாறியவள். இப்போது அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது கனவு நனவானதாகவே எனக்கு தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்