தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சென்னையில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் மற்றும் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஈசிஆர் சாலையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சில தினங்களுக்கு முன்பு ரஜினியும், ஷாருக்கானும் நேரில் சந்தித்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படப்பிடிப்பும், மகேஷ் பாபு நடிக்கும் அவரது 28வது படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படி இருவரும் ஒரே ஸ்டுடியோவில் நடித்து வந்த போதும் இதுவரை அவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை. என்றாலும் விரைவில் விஜய்யும், மகேஷ் பாபுவும் நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜய் தமிழில் நடித்துள்ள கில்லி, போக்கிரி உள்ளிட்ட பல படங்கள் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த படங்களின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.