25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளிவந்தது.
முதல் மூன்று நாட்களில் ரூ.250 கோடி வசூலைக் கடந்ததாக சொல்லப்பட்டது. சுமார் 400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 700 கோடி வசூலைக் கடந்தால்தான் லாபகரமான படமாக அமையும் என பாலிவுட்டில் தெரிவித்திருந்தார்கள். ஆனால், முதல் மூன்று நாள் வசூல் தவிர வார நாட்களில் இப்படத்தின் வசூல் வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் 40 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளதாம்.
இதனால், படம் எதிர்பார்க்கப்பட்ட வசூலைப் பெற முடியாமல் போகும் என்றும் சொல்கிறார்கள். எனவே, படம் நஷ்டத்தை நோக்கி நகர்வதைத் தவிர்க்க முடியாது என்றும் தெரிவிக்கிறார்கள். ஓடிடி மற்றும் இதர உரிமைகள் மூலம் தயாரிப்பாளர் பணத்தைத் தேற்றலாம். ஆனால், தியேட்டர் உரிமைகளை வாங்கியவர்களுக்கு சோதனையாக இருக்கும் என்கிறார்கள்.