நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளிவந்தது.
முதல் மூன்று நாட்களில் ரூ.250 கோடி வசூலைக் கடந்ததாக சொல்லப்பட்டது. சுமார் 400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 700 கோடி வசூலைக் கடந்தால்தான் லாபகரமான படமாக அமையும் என பாலிவுட்டில் தெரிவித்திருந்தார்கள். ஆனால், முதல் மூன்று நாள் வசூல் தவிர வார நாட்களில் இப்படத்தின் வசூல் வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் 40 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளதாம்.
இதனால், படம் எதிர்பார்க்கப்பட்ட வசூலைப் பெற முடியாமல் போகும் என்றும் சொல்கிறார்கள். எனவே, படம் நஷ்டத்தை நோக்கி நகர்வதைத் தவிர்க்க முடியாது என்றும் தெரிவிக்கிறார்கள். ஓடிடி மற்றும் இதர உரிமைகள் மூலம் தயாரிப்பாளர் பணத்தைத் தேற்றலாம். ஆனால், தியேட்டர் உரிமைகளை வாங்கியவர்களுக்கு சோதனையாக இருக்கும் என்கிறார்கள்.