மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா |
2006ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் வேட்டையாடு விளையாடு. தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கியுள்ள கவுதம் மேனன் அந்த படத்தின் ஆடியோ விழாவின் போது வேட்டையாடு விளையாடு 2 படத்தின் கதையை ஜெயமோகன் எழுதி வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் அப்படம் குறித்து ஒரு பேட்டியில் அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில் ‛‛வேட்டையாடு விளையாடு'' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த கமல்ஹாசன் இந்த இரண்டாம் பாகத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறார். ஓய்வு பெற்றுள்ள அவரை மீண்டும் ஒரு வழக்கில் ஆஜராவதற்கு காவல்துறை அழைப்பு விடுத்ததை அடுத்து அந்த வழக்கை விசாரணை செய்வதற்காக அவர் மீண்டும் களத்தில் இறங்குகிறார். இதுதான் படத்தின் ஒன் லைன் என கூறியுள்ளார் ஜெயமோகன்.