இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
2006ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் வேட்டையாடு விளையாடு. தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கியுள்ள கவுதம் மேனன் அந்த படத்தின் ஆடியோ விழாவின் போது வேட்டையாடு விளையாடு 2 படத்தின் கதையை ஜெயமோகன் எழுதி வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் அப்படம் குறித்து ஒரு பேட்டியில் அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில் ‛‛வேட்டையாடு விளையாடு'' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த கமல்ஹாசன் இந்த இரண்டாம் பாகத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறார். ஓய்வு பெற்றுள்ள அவரை மீண்டும் ஒரு வழக்கில் ஆஜராவதற்கு காவல்துறை அழைப்பு விடுத்ததை அடுத்து அந்த வழக்கை விசாரணை செய்வதற்காக அவர் மீண்டும் களத்தில் இறங்குகிறார். இதுதான் படத்தின் ஒன் லைன் என கூறியுள்ளார் ஜெயமோகன்.