‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! |
சர்க்காரு வாரி பாட்டா படத்தை அடுத்து தற்போது திரி விக்ரம் இயக்கும் படத்தில் நேற்று முதல் நடிக்க தொடங்கி இருக்கிறார் மகேஷ் பாபு. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கும் மகேஷ் பாபு, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ராஜமவுலியுடன் முதல் முறையாக இணையப் போகிறார்.
மேலும், திரி விக்ரம் மற்றும் ராஜமவுலி படங்கள் மூலம் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்த போவதாக கூறியுள்ள மகேஷ் பாபு, திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கும் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் பான் இந்தியா படம் உள்நாடு-வெளிநாடு என பல மொழிகளில் வெளியாகிறது. ராஜமவுலி இயக்கும் படத்தில் 2023 ஜூன் மாதம் முதல் நடிக்க இருக்கும் மகேஷ் பாபு தற்போது எனக்கு 47 வயது. எனக்கு 50 வயதாகும்போது அப்படம் திரைக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு ராஜமவுலி படம் தனக்கு உலகளாவிய ஒரு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.