2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! |

தமிழில் கதிர் இயக்கிய காதல் தேசம் படத்தில் அறிமுகமான பாலிவுட் நடிகை தபு, பின்னர் இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது 50 வயதாகும் தபு திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், அனைத்து பெண்களையும் போலவே எனக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனபோதிலும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார் தபு. அதோடு, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றினால் வயது ஒரு தடையில்லை. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அதனால் என்னை பொறுத்தவரை குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். தபுவின் இந்த பேட்டி சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.