கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் | எம்புரான் படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் தரப்படவில்லை : சுரேஷ் கோபி |
ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன் மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் பிரம்மாஸ்திரா. இந்த படம் நாளை செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்த படம் வெற்றி பெற வேண்டும் பிரார்த்தனை செய்வதற்காக ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் உஜ்ஜயினில் உள்ள மஹாகாளேஸ்வரர் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றனர்.
இந்த தகவலை ஆலியா பட முன்கூட்டியே சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து அங்கே கூடிய பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள், ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரையும் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்..
போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தும் கூட ரன்பீர் கபூரால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரும் திரும்பினர். அதேசமயம் இவ்வளவு களேபரங்கள் நடந்த நிலையிலும் கூட, படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி மஹாகாளேஸ்வரர் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது..