இயக்குனர் சசி உடன் இணையும் நடிகர் சசிகுமார்! | கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் இணைந்த விஷால்! | ரஹ்மானின் முன்னாள் மனைவி என சொல்லாதீர்கள்: சாய்ரா பானு வேண்டுகோள் | நடிகை பிந்து கோஷ் காலமானார் | தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் வெளியாகும் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' | முதலில் பேபி அடுத்து பேப்! அமலாபால் வெளியிட்ட வீடியோ பதிவு | 'பராசக்தி' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பிரம்மாண்ட ஹோம் ஸ்டுடியோ! | வெளியீட்டிற்குத் தயாரான சமந்தாவின் முதல் தயாரிப்பு 'சுபம்' | சம்பளத்தை உயர்த்த கமிஷன் வெட்டும் டிராகன் |
பூரி ஜெகன்னாத், விஜய் தேவரகொண்டா கூட்டணியில் வெளிவந்த 'லைகர்' படம் அனைத்து மொழிகளிலும் படுதோல்வியைத் தழுவியது. வெளியீட்டிற்கு முன்பாக பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட படம். விஜய், அனன்யா இருவரும் ஊர் ஊராகச் சென்று படத்தைப் பற்றி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். ஆனால், படம் வெளியான பின்பு கதையே இல்லாத காரணத்தால் தோல்வியைத் தழுவியது.
இப்படத்தின் தோல்வி பூரி ஜெகன்னாத், விஜய் கூட்டணியில் அடுத்து உருவாகி வரும் 'ஜனகனமண' படத்தையும் பாதித்துள்ளது. இப்படத்தை 'லைகர்' வெளியீட்டிற்கு முன்பாகவே ஆரம்பித்தார்கள். கதாநாயகியாக 'பீஸ்ட்' நாயகி பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. அடுத்த வருடம் ஆகஸ்ட் 3ம் தேதி படம் வெளியீடு என்று கூட அறிவித்தார்கள்.
இந்நிலையில் பூரி ஜெகன்னாத்தும், விஜய் தேவரகொண்டாவும் கலந்து பேசி இப்படத்தை டிராப் செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தற்காலிக டிராப்பா, நிரந்தர டிராப்பா என்பது பின்னர் தெரிய வரும்.