இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
பூரி ஜெகன்னாத், விஜய் தேவரகொண்டா கூட்டணியில் வெளிவந்த 'லைகர்' படம் அனைத்து மொழிகளிலும் படுதோல்வியைத் தழுவியது. வெளியீட்டிற்கு முன்பாக பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட படம். விஜய், அனன்யா இருவரும் ஊர் ஊராகச் சென்று படத்தைப் பற்றி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். ஆனால், படம் வெளியான பின்பு கதையே இல்லாத காரணத்தால் தோல்வியைத் தழுவியது.
இப்படத்தின் தோல்வி பூரி ஜெகன்னாத், விஜய் கூட்டணியில் அடுத்து உருவாகி வரும் 'ஜனகனமண' படத்தையும் பாதித்துள்ளது. இப்படத்தை 'லைகர்' வெளியீட்டிற்கு முன்பாகவே ஆரம்பித்தார்கள். கதாநாயகியாக 'பீஸ்ட்' நாயகி பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. அடுத்த வருடம் ஆகஸ்ட் 3ம் தேதி படம் வெளியீடு என்று கூட அறிவித்தார்கள்.
இந்நிலையில் பூரி ஜெகன்னாத்தும், விஜய் தேவரகொண்டாவும் கலந்து பேசி இப்படத்தை டிராப் செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தற்காலிக டிராப்பா, நிரந்தர டிராப்பா என்பது பின்னர் தெரிய வரும்.