கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தமிழ் சினிமாவில் அடுத்த பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி உள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் தமிழ் தவிர, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
அக்டோபர் மாத முதல் வாரத்தில் விஜய தசமி, ஆயுத பூஜை ஆகிய பண்டிகை நாட்கள் வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்த ஒரு வாரத்தில் விடுமுறை உண்டு. எனவேதான் விடுமுறையைக் கருத்தில் கொண்டு படத்தை செப்டம்பர் 30ம் தேதி வெளியிடுவதாக எப்போதோ அறிவித்தார்கள்.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் போட்டியாக செல்வராகவன் இயக்கியுள்ள 'நானே வருவேன்' படம் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், ஹிந்தியிலும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் போட்டியாக 'விக்ரம் வேதா' படம் வெளிவர உள்ளது.
தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' போன்ற பிரம்மாண்டப் படங்களும், கன்னடத்தில் 'கேஜிஎப் 2' படமும் வெளிவந்த போது அந்தப் படங்கள் இந்திய அளவில், உலக அளவில் வெற்றி பெற்றால் தங்கள் மொழி சினிமாவுக்குப் பெருமை என தெலுங்கு, கன்னடத் திரையுலகினர் வேறு படங்களை வெளியிடுவதை தள்ளி வைத்தனர்.
ஆனால், தமிழ் நாவல் உலகில் பெரிய சாதனையைப் படைத்த 'பொன்னியின் செல்வன்' நாவல், மணிரத்னம் இயக்கத்தில் பல நடிகர்கள், நடிகைகள் நடிக்க வெளிவந்து பெரும் வெற்றியும், வரவேற்பும் பெற்றால் அது தமிழ் சினிமாவுக்குப் பெருமையான ஒன்றாகவே இருக்கும். எனவே, 'நானே வருவேன்' படத்தைத் தள்ளி வைப்பதுதான் சரியாக இருக்கும் என தமிழ்த் திரையுலகில் உள்ள பலர் கருதுகிறார்கள்.