பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தமிழ் சினிமாவில் அடுத்த பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி உள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் தமிழ் தவிர, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
அக்டோபர் மாத முதல் வாரத்தில் விஜய தசமி, ஆயுத பூஜை ஆகிய பண்டிகை நாட்கள் வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்த ஒரு வாரத்தில் விடுமுறை உண்டு. எனவேதான் விடுமுறையைக் கருத்தில் கொண்டு படத்தை செப்டம்பர் 30ம் தேதி வெளியிடுவதாக எப்போதோ அறிவித்தார்கள்.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் போட்டியாக செல்வராகவன் இயக்கியுள்ள 'நானே வருவேன்' படம் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், ஹிந்தியிலும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் போட்டியாக 'விக்ரம் வேதா' படம் வெளிவர உள்ளது.
தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' போன்ற பிரம்மாண்டப் படங்களும், கன்னடத்தில் 'கேஜிஎப் 2' படமும் வெளிவந்த போது அந்தப் படங்கள் இந்திய அளவில், உலக அளவில் வெற்றி பெற்றால் தங்கள் மொழி சினிமாவுக்குப் பெருமை என தெலுங்கு, கன்னடத் திரையுலகினர் வேறு படங்களை வெளியிடுவதை தள்ளி வைத்தனர்.
ஆனால், தமிழ் நாவல் உலகில் பெரிய சாதனையைப் படைத்த 'பொன்னியின் செல்வன்' நாவல், மணிரத்னம் இயக்கத்தில் பல நடிகர்கள், நடிகைகள் நடிக்க வெளிவந்து பெரும் வெற்றியும், வரவேற்பும் பெற்றால் அது தமிழ் சினிமாவுக்குப் பெருமையான ஒன்றாகவே இருக்கும். எனவே, 'நானே வருவேன்' படத்தைத் தள்ளி வைப்பதுதான் சரியாக இருக்கும் என தமிழ்த் திரையுலகில் உள்ள பலர் கருதுகிறார்கள்.