20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
தமிழ் சினிமாவில் அடுத்த பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி உள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் தமிழ் தவிர, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
அக்டோபர் மாத முதல் வாரத்தில் விஜய தசமி, ஆயுத பூஜை ஆகிய பண்டிகை நாட்கள் வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்த ஒரு வாரத்தில் விடுமுறை உண்டு. எனவேதான் விடுமுறையைக் கருத்தில் கொண்டு படத்தை செப்டம்பர் 30ம் தேதி வெளியிடுவதாக எப்போதோ அறிவித்தார்கள்.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் போட்டியாக செல்வராகவன் இயக்கியுள்ள 'நானே வருவேன்' படம் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், ஹிந்தியிலும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் போட்டியாக 'விக்ரம் வேதா' படம் வெளிவர உள்ளது.
தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' போன்ற பிரம்மாண்டப் படங்களும், கன்னடத்தில் 'கேஜிஎப் 2' படமும் வெளிவந்த போது அந்தப் படங்கள் இந்திய அளவில், உலக அளவில் வெற்றி பெற்றால் தங்கள் மொழி சினிமாவுக்குப் பெருமை என தெலுங்கு, கன்னடத் திரையுலகினர் வேறு படங்களை வெளியிடுவதை தள்ளி வைத்தனர்.
ஆனால், தமிழ் நாவல் உலகில் பெரிய சாதனையைப் படைத்த 'பொன்னியின் செல்வன்' நாவல், மணிரத்னம் இயக்கத்தில் பல நடிகர்கள், நடிகைகள் நடிக்க வெளிவந்து பெரும் வெற்றியும், வரவேற்பும் பெற்றால் அது தமிழ் சினிமாவுக்குப் பெருமையான ஒன்றாகவே இருக்கும். எனவே, 'நானே வருவேன்' படத்தைத் தள்ளி வைப்பதுதான் சரியாக இருக்கும் என தமிழ்த் திரையுலகில் உள்ள பலர் கருதுகிறார்கள்.