அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
அரசியலுக்கு முழுக்கு போட்டுள்ள ரஜினி, படங்களில் நடிப்பதிலும், ஆன்மிகத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். லோக்சபா தேர்தல் மற்றும் ஜெயிலர் பட வேலைகள் ஆரம்பமானதை முன்னிட்டு, ரஜினி குறித்த பேச்சு அதிகம் எழத் துவங்கியுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினி, 'அரசியலுக்கு வரப்போவதில்லை' என திட்டவட்டமாக அறிவித்து விட்டார். கடந்த சட்டசபை தேர்தலின் போதே, ஆதரவு கேட்ட கமலுக்கு, ரஜினி தரப்பிலான பதில் ஏமாற்றத்தையே தந்தது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கு சில காலமே உள்ள நிலையில், கூட்டணி மற்றும் பிரபலங்களின் ஆதரவை பெறுவதில் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அதிலும், ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்களை தங்கள் பக்கம் இழுப்பதிலும், அவர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதிலும், பா.ஜ.,வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
'மக்களிடம் இன்றும் நெருக்கமான தொடர்பு கொண்டவர் ரஜினி' என, பா.ஜ.,வினர் பேசத் துவங்கி உள்ளனர். அதிலும், ரஜினி நடிக்கும் பட வேலை ஆரம்பமாகும்போதும், பட வெளியீட்டின் போதும், அவர் பற்றிய பேச்சு அதிகரிக்கும். அந்த வகையில், ஜெயிலர் பட வேலைகள் துவங்குவதால், தற்போது ரஜினி பற்றிய பேச்சு எழுந்துள்ளது. 'வரும் ஏப்ரலுக்குள், ரசிகர்களை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்' என, அவரது அண்ணன் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 'கர்நாடக கவர்னராக ரஜினியை அறிவிக்கப் போகின்றனர்' என்ற பேச்சும் பரவி வருகிறது. இப்போதைக்கு, ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகும் வரை, அவர் குறித்த பேச்சுகளுக்கு பஞ்சம் இருக்காது.
- நமது நிருபர் -