'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
என்னதான் முன்னணி சேனல்கள் பல இருந்தாலும் மக்களின் ரசனை அறிந்து புதிய புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் முன்னிலை வகிக்கிறது விஜய் டி.வி. அதன்பிறகு அந்த நிகழ்ச்சியை காப்பி அடித்து மற்ற சேனல்கள் வேறு பெயரில் ஒளிபரப்பும். கோடீஸ்வரன், பிக் பாஸ் உள்ளிட்ட சர்வதேச நிகழ்ச்சிகளையும் கொண்டு வந்தது விஜய் சேனல். உள்ளூர் மக்களுக்கு ஏற்ற வகையில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக நடத்தியது.
அந்த வரிசையில் அடுத்து வரும் புதிய நிகழ்ச்சி ஊ சொல்றியா ஊஹும் சொல்றியா?. புஷ்பா படத்தின் புகழ்பெற்ற பாடலின் வரியையே தலைப்பாக்கி விட்டார்கள். இந்த நிகழ்ச்சியை மா.பா.கா ஆனந்தும், பிரியங்காவும் தொகுத்து வழங்குகிறார்கள். தொகுப்பாளர் வைக்கும் பணத்தை விட எதிரில் ஆடுகிறவர் அதிகமான தொகையை வைக்க வேண்டும். அவர் அதை ஏற்க மறுத்தால் மேலும் தொகையை வைக்க வேண்டும். இப்படி போகும் இந்த விளையாட்டு. இந்த புதிய கேம் ஷோம் வருகிற (செப்டம்பர்) 4ம் தேதி ஆரம்பமாகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.