பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு மீண்டும் கேரளா கோழிக்கோட்டில் தொடங்கி உள்ளது. 20 நாட்கள் வரை அங்கே படப்பிடிப்பு நடக்கிறது. ரஜினி தனது போர்ஷனை முடித்துவிட்டு ஒரு வாரத்தில் சென்னை திரும்புவார் என தகவல். கண்டிப்பாக, ஆயிரம் கோடி வசூலை ஈட்ட வேண்டும் என்ற டார்க்கெட்டுடன் படப்பிடிப்பு நடக்கிறதாம். அதற்கான ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
ரஜினி தவிர, பாலகிருஷ்ணா, சிவராஜ்குமார் போன்ற மற்ற மொழி முன்னணி நடிகர்களும் நடிப்பதால் இந்த பட்ஜெட் சாத்தியம் என்று படக்குழு நினைக்கிறதாம். வில்லனாக பஹத்பாசில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் வழக்கமான மார்க்கெட் தவிர, புதிய ஏரியாவிலும், புதிய நாடுகளிலும் இந்த படத்தை பிஸினஸ் பண்ண இப்பவே ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
ரஜினியை பொறுத்தவரையில் நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறாராம். பிஸினஸ், வரவு செலவில் தலையிடுவது இல்லை. தன் படத்தால் யாருக்கும் நஷ்டம் வரக்கூடாது என்று மட்டும் அடிக்கடி சொல்கிறாராம்.