டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு மீண்டும் கேரளா கோழிக்கோட்டில் தொடங்கி உள்ளது. 20 நாட்கள் வரை அங்கே படப்பிடிப்பு நடக்கிறது. ரஜினி தனது போர்ஷனை முடித்துவிட்டு ஒரு வாரத்தில் சென்னை திரும்புவார் என தகவல். கண்டிப்பாக, ஆயிரம் கோடி வசூலை ஈட்ட வேண்டும் என்ற டார்க்கெட்டுடன் படப்பிடிப்பு நடக்கிறதாம். அதற்கான ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
ரஜினி தவிர, பாலகிருஷ்ணா, சிவராஜ்குமார் போன்ற மற்ற மொழி முன்னணி நடிகர்களும் நடிப்பதால் இந்த பட்ஜெட் சாத்தியம் என்று படக்குழு நினைக்கிறதாம். வில்லனாக பஹத்பாசில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் வழக்கமான மார்க்கெட் தவிர, புதிய ஏரியாவிலும், புதிய நாடுகளிலும் இந்த படத்தை பிஸினஸ் பண்ண இப்பவே ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
ரஜினியை பொறுத்தவரையில் நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறாராம். பிஸினஸ், வரவு செலவில் தலையிடுவது இல்லை. தன் படத்தால் யாருக்கும் நஷ்டம் வரக்கூடாது என்று மட்டும் அடிக்கடி சொல்கிறாராம்.




