ஆகஸ்ட் 14ல் சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரிலீஸ் | 42 வயதில் இப்படியொரு பிட்னஸா? ரகசியம் பகிரும் அபிராமி | எனக்கு பிடித்த படம் 'ரிதம்': அர்ஜூன் பேட்டி | ஆலியா பட் சண்டை காட்சிகள்: ஆச்சரியப்பட்ட பாபி தியோல் | வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ் | 'டான் 3' சர்ச்சையை சமரசமாக முடிக்க ரன்வீர் சிங் முயற்சி | கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன் | தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல் | 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பும் கிச்சா சுதீப் | எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; 'காட்டாளன்' படக்குழு வேண்டுகோள் |

நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு மீண்டும் கேரளா கோழிக்கோட்டில் தொடங்கி உள்ளது. 20 நாட்கள் வரை அங்கே படப்பிடிப்பு நடக்கிறது. ரஜினி தனது போர்ஷனை முடித்துவிட்டு ஒரு வாரத்தில் சென்னை திரும்புவார் என தகவல். கண்டிப்பாக, ஆயிரம் கோடி வசூலை ஈட்ட வேண்டும் என்ற டார்க்கெட்டுடன் படப்பிடிப்பு நடக்கிறதாம். அதற்கான ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
ரஜினி தவிர, பாலகிருஷ்ணா, சிவராஜ்குமார் போன்ற மற்ற மொழி முன்னணி நடிகர்களும் நடிப்பதால் இந்த பட்ஜெட் சாத்தியம் என்று படக்குழு நினைக்கிறதாம். வில்லனாக பஹத்பாசில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் வழக்கமான மார்க்கெட் தவிர, புதிய ஏரியாவிலும், புதிய நாடுகளிலும் இந்த படத்தை பிஸினஸ் பண்ண இப்பவே ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
ரஜினியை பொறுத்தவரையில் நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறாராம். பிஸினஸ், வரவு செலவில் தலையிடுவது இல்லை. தன் படத்தால் யாருக்கும் நஷ்டம் வரக்கூடாது என்று மட்டும் அடிக்கடி சொல்கிறாராம்.




