ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

அம்மணி படத்தின் மூலம் அறிமுகமானவர் செம்மலர் அண்ணம். முறைப்படி நடிப்பு பயிற்சி முடித்து நடிக்க வந்தவர். கோயம்புத்தூர் சொந்த ஊர். அதன்பிறகு மகளிர் மட்டும், குரங்கு பொம்மை, தம்பி, மாடத்தி, சில்லு கருப்பட்டி, பொன்மகள் வந்தாள் உள்பட பல படங்களில் நடித்தார். அவர் தற்போது சஷ்தி என்ற குறும்படத்தின் கதையின் நாயகியாக நடித்துள்ளார். ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் இந்த குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.
ஒரு தாய்க்கும் வளர்ப்பு மகனுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த குறும்படம். தான் வளர்ப்பு மகன் என்பதை அறியாமலேயே வளரும் சிறுவன் ஒருவன், சாதாரண பெண்ணாக இருக்கும் ஒருவரை எப்படி கடவுள் என நினைக்கும் அளவுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவனுடைய கருத்துக்கள் எப்படி மாறுகின்றன என்பதை சொல்கிறது.
லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த குறும்படம் டோக்கியோ முதல் டொராண்டோ வரை, 25 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது. இதில் தாயாக நடித்துள்ள செம்மலர் அன்னத்துக்கு சிறந்த நடிகைக்கான பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.