பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி |

1964ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி, 1974ல் வெளிவந்த “திருமாங்கல்யம்” என்ற திரைப்படம் வரை, பத்தே ஆண்டுகளில் பலரும் புருவம் உயர்த்தும் அளவிற்கு 100 திரைப்படங்களைக் கடந்த ஒரு ஆகச் சிறந்த திரைக்கலைஞராகவும், பரதநாட்டியம், மோகினி ஆட்டம், மணிப்புரி போன்ற நடனக் கலைகளை முறைப்படி கற்றறிந்த சிறந்த நடனக் கலைஞராகவும், இயல்பிலேயே புத்தகங்கள் வாசிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவராகவும் அறியப்படுபவர் ஜெயலலிதா. அவர் நாயகியாக நடித்து வெளிவந்த நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் சிறப்புமிக்க ஓர் திரைப்படமாக இன்றும் பார்க்கப்பட்டு வரும் ஒரு திரைப்படம்தான் இந்த “அடிமைப் பெண்”.
1969ம் ஆண்டு 'எம் ஜி ஆர் பிக்சர்ஸ்' சார்பில் எம் ஜி ஆரே தயாரித்து, நாயகனாக நடித்து வெளியிட்ட இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் 'திரையிசைத் திலகம்' கே வி மகாதேவன். முன்பு வேறொரு படப்பிடிப்பில் இருந்த ஜெயலலிதா, பொழுதுபோக்கிற்காக ஏதோ ஒரு பாடலை அவர் முணுமுணுத்துக் கொண்டு பாடிக் கொண்டிருந்ததைக் கேட்ட எம் ஜி ஆர், தனது 'அடிமைப் பெண்' திரைப்படத்தின் இசையமைப்பாளரான கே வி மகாதேவனை அழைத்து, இந்தப் படத்தின் கதாநாயகியை அவரது சொந்தக் குரலிலேயே ஒரு பாட்டு பாட வைக்கலாம் என நினைக்கின்றேன் என்ற தனது விருப்பத்தை அவரிடம் சொல்ல, அங்கே உருவானது “அம்மா என்றால் அன்பு” என்ற அந்தப் பாடலுக்கான ஆரம்பம்.
பின்னர் படத்தின் நாயகியான ஜெயலலிதாவை வரவழைத்து, இந்தப் பாடலைப் பாடும்படி சொல்ல, அவரோ தனக்குப் பாட வராது என்று அவர்களிடம் வாதிட, இசையமைப்பாளர் கே வி மகாதேவன் முதலில் நீங்கள் பாடுங்கள் பின்னர் பார்ப்போம் எனக் கூறி, அவர் மெட்டமைத்து வைத்திருந்த “அம்மா என்றால் அன்பு” என்ற பாடலை அவருக்குப் பாடிக்காட்டி, அதன்பின் அவரையும் பாடச் செய்திருக்கின்றார்.
மைக் இல்லாமலேயே அந்தப் பாட்டை ஜெயலலிதா இனிமையாகப் பாடியதைக் கேட்ட இசையமைப்பாளர் கே வி மகாதேவன், ஜெயலலிதாவின் குரலிலேயே அந்தப் பாடலைப் பதிவும் செய்தார். ஜெயலலிதா என்ற அந்தப் பல்துறை வித்தகரின் திறமைகளில் பின்னணிப் பாடகி என்ற மேலும் ஓர் திறமை இணைய காரணமாயிருந்த ஒரு திரைப்படமாக அமைந்ததுதான் இந்த “அடிமைப் பெண்”.