'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி |

தெலுங்கு திரையுலகின் முன்னனி நாயகனாக நானி நடித்த ஷியாம் சிங்கா ராய் படத்தை ராகுல் சன்கிரித்யன் இயக்க, வெங்கட் போயனபள்ளி தயாரித்திருந்தார். கடந்தாண்டு இறுதியில் வெளியான இப்படம் மறுபிறவியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்றது. இதில் நானி இரட்டை வேடத்தில் நடிக்க, சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்துள்ளனர். சிறந்த காலகட்டப்படம், சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகிய மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியாபட் நடித்த ஆர்.ஆர்.ஆர் படத்திற்கும் ஆஸ்கர் கிடைக்கும் என இயக்குனர் ஆனுராக் காஷ்யப் கூறியுள்ளார். ‛ஆர்ஆர்ஆர் படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரைத்தால், முதல் இந்திய படமாக தேர்வாகும். 99 சதவீதம் இப்படத்திற்கு ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு' என கூறியுள்ளார்.




