தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | படிப்பை விற்காதீர்கள்: தனுஷ் | மீண்டும் ஒரு ‛லக்கி மேன்' : ஹீரோவாக யோகி பாபு | பணிவாக இருங்கள், பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்க : மாணவர்களுக்கு நயன்தாரா அட்வைஸ் | 'உன்னோட நடந்தா' பாடல் அனுபவத்தைக் கூறும் சுகா | அமெரிக்க வசூல் - இரண்டாம் இடத்தைப் பிடித்த 'பதான்' | ரஜினி படங்கள், கின்னஸ் சாதனை படத்தை எடுத்த தயாரிப்பாளர் காலமானார் | பிப்ரவரி 18ல் சிம்புவின் ‛பத்து தல' படத்தின் இசை விழா | சூர்யா 42 : அதிரடி சண்டைக் காட்சி படமாக்கம் | 22வது திருமணநாளில் ராதிகாவுக்காக சரத்குமார் வெளியிட்ட வீடியோ |
தென்னிந்தியத் திரையுலகில் முக்கியமான காதல் ஜோடியாக இருந்து கல்யாணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்தவர்கள் நாகசைதன்யா, சமந்தா. இருவரது திருமணப் பிரிவு பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனாலும், இதுவரையிலும் இருவரும் அவர்களது பிரிவைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டதில்லை.
தற்போது ஆமீர்கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நாகசைதன்யா. அதற்காக பிரமோஷன்களுக்காக அவர் ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார். மும்பைக்குச் சென்ற போது ஒரு பேட்டியில் அவரிடம், 'சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்…?”, என்று கேட்டுள்ளார்கள். அதற்கு நாகசைதன்யா, “அவருக்கு ஹை சொல்வேன், கட்டிப்பிடிப்பேன்,” என்று கூலாக பதில் சொல்லியுள்ளார்.
ஆனால், சமீபத்தில் காபி வித் கரன் நிகழ்ச்சியில் சமந்தாவிடம், “நாகசைதன்யாவையும், உங்களையும் ஒரு அறைக்குள் தள்ளினால் என்ன செய்வீர்கள்,” என்று கேட்கப்பட்டதற்கு, “யாராவது ஒருவர் கூரான ஆயுதங்களை மறைப்போம்,” என்று பதிலளித்துள்ளார்.