என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சின்னத்திரையின் வில்லி நடிகையான ஸ்வேதா ஸ்ரிம்டன், ஜீ தமிழின் 'சித்திரம் பேசுதடி' மற்றும் 'நினைத்தாலே இனிக்கும்' ஆகிய தொடர்களின் மூலம் மீடியா வெளிச்சத்தை பெற்று மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். மாடலிங்கில் அறிமுகமாகி திரைத்துறையில் பயணித்து வரும் ஸ்வேதாவுக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று தான் ஆசை. இதற்காக பல வருடங்களாக கடுமையாக முயற்சித்து வந்த ஸ்வேதா, பல குறும்படங்கள், ஆல்பம் பாடல்கள் உட்பட 'ஆடை' மற்றும் 'நயம்' ஆகிய பாடங்களில் கிளாமராக நடித்து கவனம் ஈர்த்தார். ஆனால், திரைப்பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் சீரியலின் பக்கம் திரும்பினார்.
இந்நிலையில், ஸ்வேதாவுக்கு தற்போது ஹீரோயின் வாய்ப்பு கதவை தட்டியுள்ளது. இயக்குநர் தம்பி ராமையா இயக்கும் 'ராஜா கிளி' படத்தில் ஸ்வேதா ஸ்ரிம்டன் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ள அவர் படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு '9 வருட போராட்டத்திற்கு பிறகு என் கேரியரில் அடுத்தக்கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளேன்' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஸ்வேதாவுக்கு சக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.