அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இந்தியத் திரையுலகத்தின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ராஜமவுலி 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களைக் கொடுத்து உலகம் முழுவதும் உள்ள பல திரைப்படக் கலைஞர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' மற்றும் சமீபத்தில் வெளிவந்த 'த கிரே மேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் சமீபத்தில் மும்பை வந்திருந்தனர். அப்போது அவர்களை ராஜமவுலி சந்தித்துப் பேசியுள்ளார்.
அது குறித்து ரூசோ பிரதர்ஸ், “சிறப்பு வாய்ந்த ராஜமவுலியை சந்தித்தது பெருமை” என்று தெரிவித்திருந்தார்கள். அதற்கு நன்றி தெரிவித்து ராஜமவுலி, “மரியாதையும், மகிழ்ச்சியும் என்னுடையது. உங்களுடனான பேச்சு சிறப்பு வாய்ந்தது. உங்களை சந்தித்து உங்கள் கலையை நானும் சிறிது கற்றுக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.