நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
இந்தியத் திரையுலகத்தின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ராஜமவுலி 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களைக் கொடுத்து உலகம் முழுவதும் உள்ள பல திரைப்படக் கலைஞர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' மற்றும் சமீபத்தில் வெளிவந்த 'த கிரே மேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் சமீபத்தில் மும்பை வந்திருந்தனர். அப்போது அவர்களை ராஜமவுலி சந்தித்துப் பேசியுள்ளார்.
அது குறித்து ரூசோ பிரதர்ஸ், “சிறப்பு வாய்ந்த ராஜமவுலியை சந்தித்தது பெருமை” என்று தெரிவித்திருந்தார்கள். அதற்கு நன்றி தெரிவித்து ராஜமவுலி, “மரியாதையும், மகிழ்ச்சியும் என்னுடையது. உங்களுடனான பேச்சு சிறப்பு வாய்ந்தது. உங்களை சந்தித்து உங்கள் கலையை நானும் சிறிது கற்றுக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.