பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
தமிழ் சினிமா உலகின் மூத்த நடிகரான கமல்ஹாசன் கடந்த பல வருடங்களாகவே ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனத்தைத் தயாரித்து வருகிறார். அந்த நிறுவனம் மூலம் தான் நடிக்கும் படங்களை மட்டுமல்லாமல் மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் தயாரித்துள்ளார்.
அவருடைய தயாரிப்பில் இதற்கு முன்பு மற்ற நடிகர்களில் சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', மாதவன் நடித்த 'நள தமயந்தி', விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்கள் மட்டுமே தயாராகியுள்ளன. தற்போது அவரது நிறுவனம் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிக்க உள்ள படங்களைத் தயாரிக்க உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அடுத்து ரஜினிகாந்த், விஜய் நடிக்க உள்ள படங்களையும் தயாரிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. 'விக்ரம்' படம் மூலம் கிடைத்த மகா லாபத்தை மீண்டும் சினிமா தயாரிப்பில் முதலீடு செய்யும் முடிவில் இருக்கிறாராம் கமல்ஹாசன். ரஜினி, விஜய் படங்கள் பற்றிய பேச்சு வார்த்தை முடிவடைந்த பின் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் என்கிறார்கள்.