‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
புதுமுகங்கள் ஆதித்யா, நிவேதா, கமலி நடிக்கும் படம் மறு விசாரணை. வி.எஸ்.விஜயகோபால் இயக்குகிறார். மதுரை அருகே உள்ள அழகர் கோவிலில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருப்பதாக கூறுகிறார் இயக்குனர் வி.எஸ்.விஜயகோபால். மேலும் அவர் மேலும் கூறியதாவது: நான் படிக்கும் காலத்தில் 5 வருடங்கள் சிறையில் இருந்த ஒரு டாக்டரை நீதிமன்றம் குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது. அப்படியென்றால் அவர் சிறையில் வாழ்ந்த 5 வருட வாழ்க்கையை யாரால் திருப்பித் தரமுடியும் என்பதை யோசித்தேன். அதுதான் இந்தப் படம். அவர் தன் மனைவியை கொலை செய்து விட்டதாக சிறைக்கு அனுப்பப்படுகிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை சொல்வதால் படத்துக்கு மறு விசாரணை என்று பெயர் வைத்திருக்கிறேன். இதை கிராமத்து க்ரைம் த்ரில்லர் என்று சொல்லலாம். ஷூட்டிங்கெல்லாம் முடிந்து விட்டது. பிப்ரவரியில ரிலீஸ் பண்ணப்போறோம் என்கிறார்.