‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என நினைக்கவில்லை; கண்ணா லட்டு திண்ண ஆசையா படம் ஜாலியான படமாக இருந்ததால் அதில் நடித்தேன், என்று படத்தின் நாயகி விசாகா சிங் கூறியுள்ளார். பிடிச்சிருக்கு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் விசாகா சிங். அதன்பிறகு இந்தி, கன்னடம், ஆங்கில படங்களில் நடிக்க சென்று விட்டார். தற்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார்.
இதுபற்றி விசாகா அளித்துள்ள பேட்டியில், மீண்டும் தமிழில் நடிக்க வருவேன் என்று எண்ணவில்லை. ஆனால் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. 3 பேர் என்னை காதலிப்பதுபோல் கதை. ரொம்பவும் ஜாலியான ஷூட்டிங். ஜாலியான கதை என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஒவ்வொரு காட்சியிலும் தேவதைபோல் அழகாக இருக்க வேண்டும் என்பதால் காஸ்டியூம் முதல் மேக்கப் வரை என் மீது கவனம் எடுத்துக்கொண்டனர், என்று கூறியுள்ளார்.