எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? |

‛ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான டாப்சி, இந்த பதினைந்து வருடங்களில் மிகப்பெரிய அளவில் தனது கேரியரில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக கதாநாயகனுடன் டூயட் பாடும் கதாபாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதையின் நாயகியாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதிலும் விளையாட்டு வீராங்கனைகளின் பயோபிக்குகளில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வரும் டாப்சி, கிரிக்கெட் வீராங்கனையும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மிதாலி ராஜின் வாழ்க்கை பயணத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள சபாஷ் மித்து என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் வரும் ஜூலை 15ல் வெளியாக உள்ளதை தொடர்ந்து அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் டாப்சி. சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்வில் பேசும்போது, “கிரிக்கெட் மட்டையை கையில் கூட தொடாமல் வளர்ந்த நான், இந்திய கிரிக்கெட் பெண் வீராங்கனையான மிதாலி ராஜின் கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலாக இருந்தது” என்று கூறியுள்ளார். இதற்காக உடல் ரீதியாக கடினமான பயிற்சிகளை மேற்கொண்டதாக கூறியுள்ள டாப்ஸி, அடுத்ததாக அவெஞ்சர் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் யாராவது இதைப்பற்றி மார்வெலிடம் சொன்னால் அவர்கள் ஏதாவது செய்யக்கூடும் என்று தனது ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார் டாப்ஸி..