மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் விஜய் ரசிகர்களை பெரிய அளவில் ஏமாற்றம் அடையச் செய்தது. விஜய் போன்ற ஒரு மிகப்பெரிய நடிகரை படம் முழுவதும் ஒரு மாலில் நடப்பது போன்ற கதைக்குள் பொருத்தியது தவறு என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்பவர் சில தினங்களுக்கு முன்பு மலையாள சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் பீஸ்ட் படம் தன்னை ரொம்பவே ஏமாற்றி விட்டது என்றும் படத்தில் தன்னை சரியாக பயன்படுத்தவில்லை என்றும், பல காட்சிகளில் அவர்கள் லாஜிக்காக கோட்டை விட்டு விட்டனர், அதனால்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அந்தப்படம் தவறிவிட்டது என்பது போன்றும் கிண்டலாக கூறியிருந்தார்.
இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர்களையும் கோபமடையச் செய்தது. இதைத்தொடர்ந்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள ஷைன் டாம் சாக்கோ, “நான் அவ்வாறு கூறியது தவறு தான் என்பதை இப்போது உணர்கிறேன். அதற்காக நான் வருத்தப்படுகிறேன். காரணம் நாம் எதைப் பற்றியோ அல்லது யாரைப் பற்றியோ மோசமாக பேசும்போது அது அவர்களை அளவில்லாமல் நேசிக்கும் பலரையும் காயப்படுத்தும் என்பதை நான் இப்போது உணர்ந்துள்ளேன். அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் நண்பா” என்று கூறியுள்ளார்.