இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
தமிழ் சினிமாவில் தமிழ்த் தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும் என சில நடிகர்களே குரல் கொடுப்பார்கள். ஆனால், அவர்களே பேசியதற்கு மாறாக தமிழ்த் தயாரிப்பாளர்களைப் புறக்கணித்து அடுத்த மொழி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலர் தற்போது தெலுங்குத் தயாரிப்பாளர்களின் படங்களில்தான் நடித்து வருகிறார்கள். விஜய் நடித்து வரும் 'வாரிசு', தனுஷ் நடித்து வரும் 'வாத்தி', சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பிரின்ஸ்' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள்தான்.
அவர்களது வரிசையில் அடுத்து சூர்யாவும் இடம் பெறுவார் எனத் தெரிகிறது. சிறுத்தை சிவா இயக்க உள்ள இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். இந்நிறுவனம் தெலுங்கில் பிரபாஸ் நடித்த 'சாஹோ, ராதேஷ்யாம்' உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த பெரிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிட்ட நடிகர்களைப் போல இயக்குனர்கள் ஷங்கர், லிங்குசாமி, வெங்கட்பிரபு, சமுத்திரக்கனி ஆகியோரும் தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு படங்களை இயக்கி வருகிறார்கள்.