தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் சமீபத்தில் எண்ணப்பட்ட ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெற்று மீண்டும் அந்த பொறுப்புக்கு வந்துள்ளார்கள். இந்த நிலையில் விஷால், கார்த்தி இருவருக்கும் துணை நடிகர் ராஜதுரை என்பர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளனர். நடிகர் சங்க வளர்ச்சி பணியில் 3 நிர்வாகிகளும் இரவு பகலுமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினரான நடிகர் ராஜதுரை சங்கத்தின் விதிகளுக்கு புறம்பாக வாட்ஸ்அப் குழுவில் சங்கத்தின் நிர்வாகிகளாக உள்ள நடிகர் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இந்த குரல் பதிவு வைரலாகி வருகிறது. எனவே பகிரங்கமாக மிரட்டல் விடுத்த துணை நடிகர் ராஜதுரை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வாட்ஸ்அப் குரல் பதிவை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.