தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பக்கங்களாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். சரித்திர கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். ஏ. ஆர் .ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் ட்ரைலர் அல்லது டீஸர் வெளியாகும் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் குறித்த ஒரு அப்டேட் வீடியோ வெளியிட்டு உள்ளார்கள். அந்த வீடியோவில், வருகிறான் சோழன் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதனால் விரைவில் இப்படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.