சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பக்கங்களாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். சரித்திர கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். ஏ. ஆர் .ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் ட்ரைலர் அல்லது டீஸர் வெளியாகும் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் குறித்த ஒரு அப்டேட் வீடியோ வெளியிட்டு உள்ளார்கள். அந்த வீடியோவில், வருகிறான் சோழன் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதனால் விரைவில் இப்படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.