ஜூலை 3ல் ரிலீசாகிறது 'கட்டா குஸ்தி 2' | 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் | 'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை |

சென்னையில் கோயம்பேடு மேம்பால பணிகள் நடந்தபோது அங்கிருந்த விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் சிலபகுதி இடிக்கப்பட்டது. முக்கிய லேண்ட் மார்க்காக இருந்த அவரது மண்டபம் தற்போது தேமுதிக அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. தற்போது அதேபோன்று மெட்ரோ ரெயில் பணிகளுக்காக கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டில் 170 சதுர அடி நிலம் தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்துவது குறித்து மெட்ரோ நிறுவனம் சார்பில் கமலுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.
சென்னையில் 61 ஆயிரம் கோடி செலவில் 2ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்த வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பாதை ஆழ்வார்பேட்டை வழியாக செல்கிறது. இதற்காக அப்பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது. இது தற்போது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் பணிக்கு இந்த இடத்தில் இருந்து 8-10 அடி இடத்தை தங்களுக்கு வழங்கும்படி மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.