20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
மலையாள திரையுலகில் தயாரிப்பாளர், நடிகர் என பிரபலமானவர் நடிகர் விஜய்பாபு. கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி மலையாள நடிகை ஒருவர், விஜய்பாபு தனக்கு படங்களில் வாய்ப்பு தருவதாக கூறி, பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு மறுநாளே விஜய்பாபு அந்த நடிகை குறித்த அடையாளத்தை பகிரங்கமாக சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தினார். இந்த இரண்டு விஷயங்களிலும் விஜய்பாபு மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் அவர் ஒரு மாத காலம் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி சில நாட்களுக்கு முன்பு கேரளா திரும்பிய அவர் போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.
இந்தநிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், விஜய் பாபுவை கைது செய்ய தடை இல்லை என உத்தரவிட்டது. அதேசமயம் போலீசார் விஜய்பாபுவை கைது செய்ய விரும்பினால் அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் பிணைத்தொகை ஆகவும் இரண்டு நபர்களின் உறுதிமொழியையும் பெற்றுக்கொண்டு அவரை ஜாமீனில் வெளியே விடவேண்டும் என்றும் அதில் கூறியிருந்தது. அந்தவகையில் இன்று நடிகர் விஜய்பாபு கைது செய்யப்பட்டு பின் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார். அதே சமயம் வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் விஜய்பாபுவிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்கு காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.