ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா மற்றும் பலர் நடித்து கடந்த 1997ம் வருடம் இதே நாளில் வெளிவந்த படம் 'சூர்ய வம்சம்'. தமிழ் சினிமாவின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றான இந்தப் படம் வந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இது குறித்து படத்தின் கதாநாயகனாக சரத்குமார் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
“ஆர்பி சௌத்ரி தயாரிப்பில், விக்ரமன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் படமான 'சூர்ய வம்சம்' படத்தில் நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. ஒரு அற்புதமான பிளாக்பஸ்டர் திரைப்படம். இதுவரையில் தியேட்டர்களில் அதிக எண்ணிக்கை மக்கள் பார்த்த சாதனையை இன்று வரை வைத்திருப்பதும், ஒரு வருடம் வரை படம் ஓடியதும் சாதாரண விஷயமல்ல. ரசிகர்கள், நலம் விரும்பிகள், படத்தைப் பார்த்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவுக்கு என்றென்றும் நன்றி, அதை எப்போதும் மறக்க மாட்டேன். அது போன்று ஒரு சூப்பர் ஹிட் படத்தை மீண்டும் கொடுக்கும் வகையில் கடினமாக உழைப்பேன்,” என சரத்குமார் பதிவிட்டுள்ளார்.