சில்க் வேடம் : மறுத்த ஒருவர்... விரும்பும் இருவர் | வங்க எழுத்தாளரின் 'ஆனந்தம் மடம்' நாவலைத் தழுவி தயாராகும் '1770' | பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனை கலாய்த்த ராஜூ : ஆடிஷனில் நடந்த சுவாரசியம் | சின்னத்திரை நட்சத்திரங்களின் ரீ-யூனியன் கொண்டாட்டம் | நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி | 'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு |
விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா மற்றும் பலர் நடித்து கடந்த 1997ம் வருடம் இதே நாளில் வெளிவந்த படம் 'சூர்ய வம்சம்'. தமிழ் சினிமாவின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றான இந்தப் படம் வந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இது குறித்து படத்தின் கதாநாயகனாக சரத்குமார் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
“ஆர்பி சௌத்ரி தயாரிப்பில், விக்ரமன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் படமான 'சூர்ய வம்சம்' படத்தில் நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. ஒரு அற்புதமான பிளாக்பஸ்டர் திரைப்படம். இதுவரையில் தியேட்டர்களில் அதிக எண்ணிக்கை மக்கள் பார்த்த சாதனையை இன்று வரை வைத்திருப்பதும், ஒரு வருடம் வரை படம் ஓடியதும் சாதாரண விஷயமல்ல. ரசிகர்கள், நலம் விரும்பிகள், படத்தைப் பார்த்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவுக்கு என்றென்றும் நன்றி, அதை எப்போதும் மறக்க மாட்டேன். அது போன்று ஒரு சூப்பர் ஹிட் படத்தை மீண்டும் கொடுக்கும் வகையில் கடினமாக உழைப்பேன்,” என சரத்குமார் பதிவிட்டுள்ளார்.