தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
ஆஹா ஓடிடி தளத்தில் அடுத்து வெளியாக இருக்கும் தொடர் ஆன்யாஸ் டுடோரியல். ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரை தயாரித்துள்ளது. ஜூலை 1ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் ரெஜினா கூறியதாவது: ஆன்யாஸ் டுடோரியல் போன்ற சைக்காலஜிகள், திரில்லர் கதைகள் வருவது மகிழ்ச்சி, நான் நடித்த மது கதாபாத்திரத்தை கண்டிப்பாக தவற விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். பல்லவி போன்ற திறமையான ஆட்கள் சினிமாவிற்கு வருவது மகிழ்ச்சி.
நான் அறிமுகமான போது திரைத்துறையில் பெண்கள் மிக குறைவாக இருந்தார்கள் இப்போது ஆண்களுக்கு இணையாக பெண்கள் வளர்ந்திருப்பது மகிழ்ச்சி. பல பெண்கள் இணைந்து இந்த தொடரை உருவாக்கி உள்ளோம். இதனை இயக்கி உள்ள பல்லவி ஏ.ஆர்.முருகதாஸ் போன்று பக்கா கமர்ஷியல் இயக்குனராக வளர்வார். பல பெரிய ஹீரோக்களை இயக்குவார். இவ்வாறு ரெஜினா பேசினார்.