நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

சென்னை பெண்ணான ரெஜினா, 2005ம் ஆண்டு வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தில் சிறிய கேரக்டர் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு 'அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சக்ரா, கசட தபற, கான்ஜூரிங் கண்ணப்பன், விடாமுயற்சி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இடையில் சில காலம் தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் போகவே தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கு முன்னணி நடிகை ஆனார். தற்போது 'தி விவ்ஸ், செக்ஷன் 108' என்கிற இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'மூக்குத்தி அம்மன் 2ம் பாகம்' படத்தில் நடித்து வருகிறார்.
ரெஜினா அறிமுகமான 'கண்ட நாள் முதல்' வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. ரெஜினாவும் சினிமாவில் தனது 20வது ஆண்டை நிறைவு செய்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது ''ரசிகர்களின் அன்பில் இத்தனை ஆண்டுகள் நனைந்தது மகிழ்ச்சி. இந்த பயணம் நீண்ட தூரமானது. இன்னும் இந்த பயணத்தில் முழுமையாக எனது கடின உழைப்பைத் தருவேன். தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பேன்'', என்றார்.