தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் | டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து |

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அஜித்தின் 'விடா முயற்சி' நாளை(பிப்., 6) வெளிவருகிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படத்தில் ரெஜினா வில்லியாக நடித்திருக்கிறார். இதற்கு முன் பல நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்திருந்தபோதும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் அவர் நடித்திருப்பது இதுவே முதல் முறை.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : இதுவரை வெளிவந்திருக்கும் டிரெய்லரை மட்டுமே வைத்து என்னுடைய கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என யூகிக்க வேண்டாம். என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு. திரையரங்கில் பார்வையாளர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள். வேறொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் மகிழ் என்னை அழைத்தார். ஆனால், ஒருவாரம் கழித்து இப்போது நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
அஜித், அர்ஜுன் என இரு ஜாம்பவான்களுடன் நடிக்கும் வாய்ப்பை விடாமுயற்சி தந்துள்ளது. இருவரை பார்த்தும் ஆச்சர்யம் அடைந்தேன். இருவரிடமும் நிறைய கற்றுக் கொண்டேன். அஜர்பைஜான் நாட்டில் பாலைவனத்தில் நடித்த சண்டை காட்சிகள் வாழ்வில் மறக்க முடியாததாக இருந்தது. என்றார்.