பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” | சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு |

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அஜித்தின் 'விடா முயற்சி' நாளை(பிப்., 6) வெளிவருகிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படத்தில் ரெஜினா வில்லியாக நடித்திருக்கிறார். இதற்கு முன் பல நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்திருந்தபோதும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் அவர் நடித்திருப்பது இதுவே முதல் முறை.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : இதுவரை வெளிவந்திருக்கும் டிரெய்லரை மட்டுமே வைத்து என்னுடைய கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என யூகிக்க வேண்டாம். என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு. திரையரங்கில் பார்வையாளர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள். வேறொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் மகிழ் என்னை அழைத்தார். ஆனால், ஒருவாரம் கழித்து இப்போது நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
அஜித், அர்ஜுன் என இரு ஜாம்பவான்களுடன் நடிக்கும் வாய்ப்பை விடாமுயற்சி தந்துள்ளது. இருவரை பார்த்தும் ஆச்சர்யம் அடைந்தேன். இருவரிடமும் நிறைய கற்றுக் கொண்டேன். அஜர்பைஜான் நாட்டில் பாலைவனத்தில் நடித்த சண்டை காட்சிகள் வாழ்வில் மறக்க முடியாததாக இருந்தது. என்றார்.




