சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
ஹிந்தியில் சல்மான்கான் நடித்த நோ என்ட்ரி படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சமந்தா மற்றும் தமன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று சல்மான்கான் விரும்புவதாகவும் அதனால் அவர்களை அணுகி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனீஸ் பாஸ்மே இயக்கும் இப்படத்தில் அனில் கபூர் மற்றும் பர்தீன் கான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். தெலுங்கு படங்கள் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் ஹிந்தியில் உள்ள ஸ்டார் ஹீரோக்கள், தெலுங்கு ஹீரோயின்களை நடிக்க வைக்க விரும்புகிறார்கள். அந்த அடிப்படையிலேயே இந்தப் படத்தில் சமந்தா மற்றும் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.