மார்டன் வில்லி மகாலட்சுமி | பழிவாங்க முடிவெடுத்த தளபதி நடிகர் | விட்டதை வட்டியும் முதலுமாக வசூலிக்கும் அமரன் | கனடாவில் 'துரந்தர் 2' படம் திரையிட்ட தியேட்டர் ஸ்கிரீனை கிழித்த ரசிகர்கள் | கஞ்சா வழக்கில் கைதான இயக்குனர் படத்தில் நடிப்பதா? மம்முட்டிக்கு நடிகர் ஹரீஷ் பெராடி கேள்வி | பிளாஷ்பேக்: வாலி, இளையராஜா இணைவுக்கு அடித்தளமிட்ட “பத்ரகாளி” | 'கிங்' படத்திற்காக ரஷ்ய சண்டை கலைஞர்களுடன் மோதும் ஷாருக்கான் | முதல் பாகத்தை மிஞ்சி விட்டது ; 'துரந்தர் 2'வுக்கு ராஜமவுலி பாராட்டு | கல்லூரி விழாவில் 'ஜெயிலர் 2' அப்டேட் கொடுத்த மிர்னா மேனன் | நினைத்ததை முடிப்பவன், சிவகாசி, ராயன் - ஞாயிறு திரைப்படங்கள் |

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படத்தை இயக்கி உள்ளார். ஏலியன் தொடர்பான கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. டிசம்பரில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசி உள்ளார் ரவிக்குமார்.
அதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் வியந்து பார்த்த ஆளுமை(கமல்). அவரோடு எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம். அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்துவைத்ததும், டைம் டிராவல் பற்றிய ஒரு ஸ்பானிஷ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டதும் இன்னும் வியப்பு குறையா நிமிடங்கள். வாழ்வின் பரவசம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் ரவிக்குமார்.




