டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படத்தை இயக்கி உள்ளார். ஏலியன் தொடர்பான கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. டிசம்பரில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசி உள்ளார் ரவிக்குமார்.
அதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் வியந்து பார்த்த ஆளுமை(கமல்). அவரோடு எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம். அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்துவைத்ததும், டைம் டிராவல் பற்றிய ஒரு ஸ்பானிஷ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டதும் இன்னும் வியப்பு குறையா நிமிடங்கள். வாழ்வின் பரவசம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் ரவிக்குமார்.